Submit your work, meet writers and drop the ads. Become a member
இது வரை பார்த்ததில்லை! பழகியதுமில்லை!
பாசம் மட்டும் நெஞ்சுக்குள்ளே வந்ததேனோ?

உன் முகம் நினைவிலில்லை! கனவிலும் தோன்றவில்லை!
கற்பனையில் உன் கரம் கோர்த்து நடக்கிறேன் ஏனோ?

நேரம் தவறாது குறுஞ்செய்தி அனுப்பினேன்!
நீ பார்க்கும் வரை பார்த்திருந்தேன்!
பார்த்தவுடன் பதிலுக்கு காத்திருந்தேன்!
உன் பதில் வராது மனச்சொர்வடைதேன்!
பதிலும் நீயும் தரவில்லை!
பரிதாபம் ஆனதோ என் நிலை!

உன் சுக போக வாழ்க்கையில் ஆசையில்லை!
உன் சிரிப்பில் நானும் விழவில்லை!
உன்னுடன் வாழும் எண்ணம் மட்டும் உதித்ததேனோ?

சொல்லி புரிய வைத்திதிட இது நாடகமில்லை!
உன்னுடன் வாழ போராடும் பெண்ணின் நிலை!


-MeenuSpecial-
Kavithai Pookkal

— The End —